Tuesday, May 22, 2012

வாழ்க்கை!



முள்ளில் கிழிபடுகின்றது
கல்லில் இடிபடுகின்றது...

மலையிலிருந்து
அருவியாய் குதித்து
மகிழ்ச்சியாய்
நடையிடுகின்றது ஆறு!

(இக்கவிதை 2004 ஜனவரியில் செம்பருத்தி இதழில் வெளியானது)
ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute