Sunday, November 20, 2011

காதல்



விழியால் காதல் என்னில் விதைத்து 
மொழியால் அன்பை நாளும் வளர்த்துப்
பழியால் விலக எண்ணுதல் தகுமோ?
வழியே நீ தான் எனக்கென அறிவாய்.

(இக்கவிதை பெப்ரவரி மாதம் 2004 ஆம் ஆண்டு செம்பருத்தி இதழில் வெளியானது)
 

இரட்டைக் குவளை



குடித்த தேநீர் 
உள்ளே
விசமாய் இறங்கியது!
உயிர் வலிக்கின்றது...
கொட்டாங்குச்சியில் "டீ"!

(இந்தக் ஹைக்கூக் கவிதை 25 /06 /2004 இல் முத்தாரம் இதழில் வெளியானது) 
ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute