Saturday, September 29, 2012

மழை!



வருக! வருக! வான் மழையே!
வளம்! பெருக! வான் மழையே!
விண்ணின் பரிசு வான் மழையே!
மண்ணின் மகிழ்ச்சி வான் மழையே!

ஆறு குளம் ஏறி அழைக்கின்றதே
அடித்துப் பெய்திடு வான் மழையே!
அன்னை பூமி குளிர்ந்திடவே
ஆர்ப்பரித்துப் பெய்திடு வான் மழையே!

புல்வெளி பசுமை கண்டிடவே
புயலெனப் பொழிந்திடு வான் மழையே!
பூவுலக உயிர்கள் வாழ்ந்திடவே
புதுமையாய்ப் பொழிந்திடு வான் மழையே!

வயலில் கதிர்கள் செழித்திடவே
வள்ளலாய்ப் பொழிந்திடு வான் மழையே!
உழவர்கள் முகம் மலர்ந்திடவே
உண்மையாய்ப் பொழிந்திடு வான் மழையே!

(இகவிதையானது 21 ஆம் திகதி நவம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டு தீக்கதிர் இதழில் வெளியானது)

0 comments:

Post a Comment

ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute