Monday, August 22, 2011
அம்மா
உழைத்து உழைத்து
உருக்குலைந்த அம்மா
பழுதுபட்ட இயந்திரம் தான்!
இன்னமும்
இயங்கிக் கொண்டிருக்கிறாள்...
வலிகளையும் காயங்களையும்
இதயத்தில்
சுமந்து கொண்டிருக்கிறாள்...
எங்கள்
வயிற்றைக் காலியாக
விடுவதில்லை!
மந்திரம் தந்திரத்தில்
எனக்கு நம்பிக்கையில்லை...
இருந்தாலும்
மந்திரம் பலிக்குமென்றால்
என்
தாயைச் சுகமாக்குவேன்!
("அம்மா" என்ற இக்கவிதையானது 2004 ஆம் ஆண்டு ஏப்பிரலில் புதியபாரதம் இதழில் வெளியானது)
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment