Tuesday, August 23, 2011

ஹைக்கூ


பிய்ந்த செருப்பு
அடையாளப்படுத்தியது...
வீட்டு வறுமையை.

விடிய விடிய
கதை பேசின...
குளத்துத் தவளைகள்.

பசித்த வயிறு
சாப்பிட மனமில்லை...
உலையில் விதைத்த நெல்.

ஒளிந்து விளையாட்டு...
தேடும் அலைகள்
வளைக்குள் நண்டு.

(குறித்த ஹைக்கூ கவிதைகள் 17 -10 -2004 அன்று தீக்கதிர் இதழில் வெளியானது)

0 comments:

Post a Comment

ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute